ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற 2019 வருடம் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் நூறு நாட்களை கடந்த நிலையில் சமீபத்தில் இதற்கான வெற்றி விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் இரண்டாவது நடிகராக நடித்த கார்த்திக் குமார் லவ் டுடே திரைப்படத்தை விமர்சனம் செய்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, லவ் டுடே திரைப்படத்தை இயக்கியதற்காக ஒரு நாள் பிரதீப் ரங்கநாதன் கண்டிப்பாக வருத்தப்படுவார். அடிடா அவளை, உதைடா இவள என்ற பாடலுக்காக செல்வராகவன் நீண்ட காலத்திற்குப் பிறகு வருத்தப்பட்டார். அது போல லவ் டுடே திரைப்படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் வருத்தப்படுவார் என தெரிவித்துள்ளார்.