ராஜா ராணி-2 சீரியலில் சந்தியா ரோலில் நடித்துவந்த ரியா விஸ்வநாதன் சில நாட்களுக்கு முன் வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதில் நடிகை ஆஷா கௌடா தான் இப்போது சந்தியாவாக நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த தொடரில் ஹீரோயினி மாற்றப்படுவது இது 3-வது முறை என்பதால் ரசிகர்கள் புது நடிகையை ஏற்றுக்கொள்ள சில காலம் ஆகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, தான் வெளியேறியதற்கான காரணம் விரைவில் வெளிவரும் என்று சூசகமாக கூறி உள்ளார். அதோடு மற்றொரு பதிவில் காரணம் அவருக்கே தெரியவில்லை என கூறி இருக்கிறார். இதனால் விஜய் டிவிக்கும் அவருக்கும் எதோ பிரச்சனை நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருமணம் முடிவானதால் தான் ராஜா ராணியிலிருந்து விலகினேன் என வந்த செய்தி முற்றிலும் போலியானது என ரியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.