வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் தான் மனு தாக்கல் செய்ய உள்ளதாக பரவிய தகவலுக்கு ஓபிஎஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே ஓபிஎஸ் சார்பில் பொதுச் செயலாளர் தேர்தலில் மனு தாக்கல் செய்யப்படுவதாக ஊடகங்களில் தவறான தகவல் வருவதாகவும், அது உண்மைக்கு மாறானது எனவும் கூறப்பட்டுள்ளது.