மணிரத்னம் டைரக்டில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன்-2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றதால் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

அப்போது பத்திரிகையாளர்களிடம் நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது “என்னை போன்றவர்களுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்பு கிடைப்பது கடினம். இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. முதல்நாள் படம் பார்க்க வேண்டும் என தஞ்சாவூர் சென்று ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டேன். நான் முதல் பாகத்தை பார்க்காதது பெரிய ஆச்சர்யமான செய்தியாகும்” என்று அவர்  பேசினார்.