மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் சென்ற வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி ரூபாய்.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்-2 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாவது உறுதி என படகுவினர் தெரிவித்தனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடலை மார்ச் 28ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு மார்ச் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் நடிகர்-நடிகைகளை பல நகரங்களுக்கு அழைத்து சென்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகள் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் முதல் பாடலை ஓரிரு வாரங்களில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.