யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர், தற்போது அடுத்து டைரக்டு செய்யும் படம் “அரியவன்”. இந்த படத்தில் ஈஷான், பிரணாலி என்ற புதுமுகங்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை எஸ்.ஜி.பி மாஸ் மீடியா தயாரிக்கிறது. மாரி செல்வத்தின் கதையை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இது ஒரு குறுகியகால தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அடுத்த மாதம் வெளிக்கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றனர். அதன்பின் மித்ரன், மாதவன் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.