தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ள நிலையில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படக்குழுவினர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு திருச்சியில் உள்ள என்ஐடி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்தினம் ஆகியோரர் ஒரு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.