வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் சென்ற ஜனவரி மாதம் வெளிவந்து மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. விமர்சனம் ரீதியாக வாரிசு படத்தை விடவும் துணிவு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இரண்டு படங்களும் வெளிவந்து 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரையிலும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வாரிசு இதுவரையிலும் ரூ.295 கோடி மற்றும் துணிவு திரைப்படம் ரூ.225 கோடி வசூல் செய்து உள்ளது. எனினும் வாரிசு திரைப்படத்தை விடவும் தயாரிப்பாளருக்கு அதிகமான லாபத்தை துணிவு தான் கொடுத்திருக்கிறது. அதாவது, வாரிசு ரூபாய்.30 கோடி வரை லாபம் கொடுத்திருக்கும் சூழ்நிலையில், துணிவு ரூபாய்.50 கோடிக்கும் மேல் லாபத்தை கொடுத்துள்ளது. இதன் வாயிலாக ரியல் பொங்கல் வின்னர் யார் என்று தெளிவாக தெரிகிறது.