கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூர் கவுண்டம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி முடிந்து செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்த செல்வராஜ் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வராஜை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.