சனாதன விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக கிளம்பியுள்ளது. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதை கண்டித்து தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்கள் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் X பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால் உதயநிதி சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொள்ளுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு சல்யூட் அடிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.