சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சாலையார் காலணி பொத்தமேடு பகுதியில் டேவிட் என்ற பவித்ரா வசித்து வந்துள்ளார். இவர் திருநங்கை அவர் நேற்று முன்தினம் பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பவித்ராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சனை இருந்ததால் மன உளைச்சலில் பவித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.