சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு போரூர் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் போரூர் சிக்னல் அருகே வேகமாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் எந்திரம் மூலம் டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.