சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் நேதாஜி நகரில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடைக்கு செல்வதற்காக சசிகலா வீட்டை பூட்டி விட்டு சாவியை மறந்து பூட்டிலேயே வைத்துவிட்டு சென்றார். இதனையடுத்து இரவு நேரத்தில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு சசிகலா அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க மோதிரம், அரை கிலோ வெள்ளி, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.