திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் மாணிக்கவாசகபுரத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டியார் சத்திரத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருதமுத்துவுக்கு தர்ஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மருதமுத்து தினமும் அதிகாலை பால் கறக்க செல்வது வழக்கம். அதன்படி நேற்றும் பால் கறக்க சென்று விட்டு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்த மருதமுத்து தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான 10 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.