திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.