கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தேர்வு மையத்தில் மன உளைச்சலில் இருந்த ஆன்றோ ஜாய் கல்லூரி விடுதியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை சக மாணவர்கள் மீட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் ஆன்றோ ஜாயை குலசேகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆன்றோ ஜாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.