தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நவநீதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் முருகேசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.