சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் எலக்ட்ரீசியனான அஜித் குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்குன்றம் நார்வாரி குப்பம் பகுதியில் இருக்கும் நண்பரான சதீஷ்குமார் என்பவரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகேஷ், டெல்லி பாபு, அக்பர் ஆகிய மூன்று பேரும் அஜித்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயமடைந்த அஜித் குமாரை அக்கம்பக்கத்தினர் மீ அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் முந்தி செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அஜித்குமாரை வெட்டியது தெரியவந்தது. இதனால் அக்பர் உள்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.