கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் திருநங்கையான ரீனா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி ரீனாவின் சகோதரி மகளும், சந்தோஷின் சகோதரி மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதில் சந்தோஷ் ரீனா சகோதரியின் மகளை அடித்ததாக தெரிகிறது. இதனை ரீனா தட்டி கேட்டார். இதனால் கோபமடைந்த சந்தோஷ், அவரது தாய் சீனம்மாள்(45) ஆகியோர் ரீனாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.