சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பாரதியார் தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஆர்த்தி கூறியதாவது, நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வேறு ஒருவர் எங்களை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுகிறார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளோம் என கூறினார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.