கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பாகலூர் ரோடு ரெயின்போ கார்டன் பகுதியில் சுப்ரீத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கீதாவை மீட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.