திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய சரண்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கனகாவின் வீட்டிற்கு அருகே பழனிக்குமார் என்பவர் அவரது காரை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் கனகா வீட்டில் இருந்து வெளியே சென்ற நேரம் சரண்யா காருக்குள் ஏரி விளையாடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து கார் கதவை திறக்க முடியாமல் சிரமப்பட்ட சரண்யா கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் மூச்சு திணறி உள்ளேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த கனகா தனது மகளை தேடி பார்த்த போது காருக்குள் சரண்யா மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக சரண்யாவை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சரண்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.