கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருமாயி(36) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விருமாயி தனது வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயகுமாரும், அவரது மகளும் விருமாயியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனையடுத்து ஓரளவு காயங்கள் குணமாகி விரும்பிய வீடு திரும்பினார். ஆனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க சிகிச்சை பலனின்றி விருமாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.