கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் மது குமார் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு ஊட்டமலை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் மதுக்குமார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மதுகுமாரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. இதுகுறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஒகேனக்கல் பரிசல்துறையில் மிதந்த மதுக்குமாரின் சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.