சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணி பிரசாத் உள்ளிட்ட நண்பர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மணி பிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.