திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மாட்டு பாறை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான விஷ்வா என்பது தெரியவந்தது. கடந்த 1- ஆம் தேதி விஷ்வா தனது நண்பரான முத்துராஜாவுடன் செம்மாட்டு பாறைக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துராஜா விஷ்வாவை கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் முத்துராஜாவை போலீசார் கைது செய்தனர்.