திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகர்நல அலுவலர் மனோஜ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற-4-ஆம் தேதி (நாளை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோழி, ஆடு, மாடு போன்றவற்றை வதை செய்வதற்கும், அதன் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

எனவே பழனி நகர் பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளையும் திறக்க கூடாது. இதேபோல் நகராட்சி ஆட்டு இறைச்சி கூடமும் செயல்படாது. எனவே உத்தரவை மீறி யாராவது இறைச்சி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.