கடலூர் மாவட்டத்தில் உள்ள எடச்சித்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான வெங்கடேசன்(53) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வெங்கடேசனின் தந்தை சிங்கு, மனைவி ஜோதி, தாய் சம்பூரணம் ஆகியோர் பெருமாள் மகன் வெங்கடேசனின் வீட்டிற்கு முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் வெங்கடேசன் விவசாயியின் மோதிர விரலை கடித்து குதறினார். இதனால் காயமடைந்த விவசாயி உளுந்தூர்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கு மகன் வெங்கடேசன், ஜோதி, சம்பூர்ணம் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.