தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 8 லாரிகளுக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.