தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவியும், சங்கர்(30) என்ற மகனும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாயாண்டி காரை பேருந்து நிலைய பகுதியில் காரை நிறுத்திவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாயாண்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாயாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த கல்யாணி கதறி அழுதபடி தனது கணவரின் உடல் மீது விழுந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.