தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.