விருதுநகர் மாவட்டம் அருகே துலுக்கப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதைந்து கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் மோதி உயிரிழந்த நபர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் ஸ்ரீதரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ரயில் மோதி நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.