தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை வாங்கி படப்பாக அடுக்கி வைத்துள்ளார். நேற்று வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் கட்டுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 60-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், விளையாட்டுத்தனமாக ஒரு சிறுவன் செய்த செயலால் வைக்கோல் படப்பில் தீ பற்றியது தெரியவந்தது.