திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம் கேட்டுள்ளார்.

அதற்கு தாமோதரன் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முருகன் அவரை கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த தாமோதரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.