கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் 14 வயது சிறுமியிடம் நட்பாக பேசி பின்னர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து சுந்தர் காதலை கூறிய போது சிறுமி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

கடந்த இரண்டு மாதமாக சிறுமி எங்கு சென்றாலும் சுந்தர் அவரை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தரப்பில் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.