புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.