திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டலப்பட்டியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக தெற்கு ஒன்றிய அவை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அழகர்சாமி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் பொம்மையசாமி கோவில் அருகே சென்றபோது திமுக கிளை செயலாளரான பாஸ்கர் ராஜா என்பவர் அழகர்சாமியை வழிமறித்து தகராறு செய்துள்ளார்.

மேலும் அழகர்சாமியை கீழே தள்ளி கல்லால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அழகர்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பாஸ்கர் ராஜாவை தேடி வருகின்றனர்.