திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் வட மாநிலங்களுக்கும் மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நிலக்கோட்டை சந்திப்பு பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இரவு 7 மணிக்கு மேல் திண்டுக்கல் செல்ல பேருந்துகளை இல்லை.

இதனால் வியாபாரிகள் வத்தலகுண்டு, கொடைரோடு போன்ற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து வேறு பேருந்துகள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகளும் இரவு 10 மணி வரை பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.