சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிப்பட்டியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று உறவினரான தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் பாலசுப்பிரமணியம் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்த பாலசுப்பிரமணியம் தலையில் படுகாயம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.