கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோவள்ளி கிராமத்தில் கொசுவலை வியாபாரம் பார்க்கும் ரங்கநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ரங்கநாத் இறந்துவிட்டார். அந்த பகுதியில் ஜோதி லிங்கேஸ்வரர் சாமி கோவில் திருவிழா நடந்ததால் போலீசாருக்கு தெரிவிக்காமலேயே ரங்கநாத்தின் உடலை எரித்துவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ரங்கநாத்தின் உறவினர்கள் மீது அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கோவில் திருவிழாவில் ஒரு சமுதாயத்தினர் வைத்த பேனரில் தங்களுக்கு வேண்டியவரின் பெயரை அச்சடிக்கவில்லை என கூறி ரங்கநாத் உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தை சேர்ந்த சிலர் திருவிழாவில் நடக்கும் நாடகத்திற்கு செல்லக்கூடாது என முடிவு எடுத்தனர். அதனை மீறி ரங்கநாத் நாடகத்தை பார்ப்பதற்காக சென்றார். இதனால் உறவினர்கள் அவரை பிடித்து இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.