திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியில் நாட்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா இடையக்கோட்டை வடக்கு தெருவில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.