சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியை கத்தியை காட்டி மிரட்டி நண்பர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து விக்கி வெள்ளை நிற பவுடரை மதுபானத்தில் கலந்து மாணவிக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மாணவி மயங்கி விழுந்தவுடன் விக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி விக்கியிடம் பேச மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த விக்கி என்னுடன் பேசவில்லை என்றால் உனது பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டி மீண்டும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சோர்வாக காணப்பட்ட மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, மாணவி தனக்கு நடந்தவற்றை கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான விக்கியை தீவிரமாக தேடி வருகின்றனர்.