பஞ்சாப் லூதியானா நகரில் முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஹர்தீப்சிங் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டி உள்ளார். எனினும் வாகனத்தில் இருந்த நபர் காரை வேகமாக இயக்கி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றார். இந்நிலையில் ஹர்தீப் சிங் மீது கார் மோதியதில் அவர் பேனட் மீது விழுந்தார்.

இதையடுத்து கடும் நெரிசல் காரணமாக வேகம் குறைந்ததால் காரிலிருந்த விழுந்த ஹர்தீப் சிங் மீட்கப்பட்டார். காரிலிருந்த 2 நபர்கள் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகள் எனவும் விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் காரில் அவர்கள் சட்டவிரோதமாக ஏதாவது கொண்டு சென்றிருக்கலாம். ஆகவே தப்பியோடிய இரண்டு பேரையும் வலைவீசி தேடி வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.