ரயில் பயணத்துக்கு ஒருநாள் முன்பாக தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 3AC மற்றும் அதற்கு அதிகமான வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு துவங்கும். படுக்கை வசதிக் கொண்ட வகுப்பிற்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். IRCTC இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், அதனை விரைவாக பதிவுசெய்ய சில விஷயங்களை மனதில்கொள்ள வேண்டும்.

தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு தங்களிடம் ஐஆர்சிடிசி கணக்கு இருப்பது அவசியம். உங்களிடம் இல்லையெனில் https://www.irctc.co.in இணையதளம் (அ) IRCTC செயலிக்கு சென்று கணக்கை உருவாக்கலாம். கணக்கு உருவாக்கப்பட்டதும் முதன்மை பட்டியலை உருவாக்க வேண்டும். எனது சுய விவரம் பிரிவில் முதன்மை பட்டியல் விருப்பத்தை கண்டறிந்து பயணிகளின் பெயர், வயது, பாலினம், பிறப்பு விருப்பம், உணவு விருப்பம், மூத்த குடிமகன், அடையாள அட்டை வகை மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

பின் முதன்மைப் பட்டியலில் பயணிகளை சேர்க்கவேண்டும். தற்போது என் சுயவிவரம் ஆப்ஷனுக்கு கீழ் தோன்றும் இடத்தில் பயண பட்டியலை உருவாக்கி முதன்மைப் பட்டியலிலிருந்து பயணிகளின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி செய்வதன் வாயிலாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு தயாராகிவிட்டீர்கள்.