உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், தங்கள் வீட்டின் மேற்கூரை வழியாக ஆபத்தான முறையில் செல்லும் உயரழுத்த மின்சாரக் கம்பிகளை அகற்றக் கோரி இரண்டு சிறுமிகள் வெளியிட்ட காணொலி, மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது.
संभल के चंदौसी क्षेत्र में दो मासूम बच्चियों ने डीएम डॉ. राजेंद्र पैंसिया से अपने घर की छत से गुजर रही 15 साल पुरानी बिजली लाइन हटाने की गुहार लगाई थी। और कमाल की बात है, प्रशासन ने महज 24 घंटे में ही इस समस्या का समाधान कर दिया। बच्चियों ने एक 29 सेकंड का वीडियो बनाकर डीएम से… pic.twitter.com/Em6XGn7j6B
— Roshan Kumar Journalist (@cameraman_r) December 17, 2025
சுமார் பதினைந்து ஆண்டுகளாகச் பயன்பாட்டில் இல்லாத இந்த மின்கம்பிகளால் தங்கள் குடும்பத்தினர் வீட்டின் மேல் தளத்தை எழுப்ப முடியாமல் தவிப்பதாகவும், இது உயிருக்கு ஆபத்தானது என்றும் அந்தச் சிறுமிகள் மாவட்ட ஆட்சியரிடம் உருக்கமாக முறையிட்டனர். ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், இறுதி முயற்சியாக அவர்கள் சமூக வலைதளங்களில் இந்தக் காணொலியைப் பகிர்ந்தனர்.
இது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பொதுமக்களின் ஆதரவைப் பெற்றதையடுத்து, சம்பல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அந்தப் பழைய மின்கம்பிகளை முற்றிலுமாக அகற்றினர். நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த இந்தப் பிரச்சினைக்குச் சிறுமிகளின் துணிச்சலான முயற்சியால் விடிவுகாலம் பிறந்துள்ளது.
இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து அச்சிறுமிகள் மற்றொரு காணொலியை வெளியிட்டுள்ளனர். சாமானிய மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளைச் சென்றடையச் சமூக வலைதளங்கள் ஒரு பாலமாகச் செயல்படும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. டிஜிட்டல் தளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் அரசு நிர்வாகத்தில் விரைவான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
