கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உறவினர்களுடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அந்த முதியவர் மயங்கி நிலைதடுமாறி தரையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் முதியவரை கைதாங்கலாக பிடித்து டீக்கடையில் அமர வைத்து தண்ணீர் கொடுத்தார்கள். சற்று நேரத்தில் முதியவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.