சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும்.

இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு ஜெ என்று கோஷம் எழுப்பினர். உடனே திமுக தொண்டர்கள் தலைவர் ஸ்டாலின் வாழ்க என கத்தினர். இருவரில் யாருடைய சத்தம் அதிகம் என்பதை காட்டும் விதமாக திமுக, பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.