பிரபல இளம் தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் ஷாலு சவுராசியா. இவர் ஐதராபாத்திலுள்ள கே.பி.ஆர். பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகாரளித்தார் ஷாலு சவுராசியா. இதையடுத்து ஊழியர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் ஷாலு சவுராசியாவும் போலீசில் புகாரளித்தார். அதன்பின் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் நடிகையை பின்தொடரவில்லை எனவும் தானும் நடைபயிற்சி செய்ததாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டு அந்த வாலிபர் சொல்வது உண்மை என உறுதிப்படுத்தினர்.