சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் பிச்சைக்காரன் -2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் “மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2016ஆம் வருடம் வெளியாகிய “ஆய்வுக் கூடம்” படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 திரைப்படத்திற்கு பயன்படுத்தி இருப்பதால் தடைவிதிக்க வேண்டும்.

அதோடு தனக்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர் இந்த மனுவுக்கு ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்துள்ளார்.