அண்மை காலமாக பெண்களுக்கு பெரிய திரையில் மட்டுமல்ல , சின்னத் திரையிலும் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இதை வாணி போஜன், பாண்டியன் ஸ்டோர் தீபிகா ஆகியோர் வெளிப்படையாக பேசி உள்ளனர்.

இதுகுறித்து சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கூறியதாவது, உலகம் தோன்றிய நாள் முதலாகவே இவை இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலை மாறும் என்பதெல்லாம் பொய், இது மாறவே மாறாது. மாறும் என ஆறுதலுக்காக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டுப் பெற்றோர்கள் பயத்தில் நடுங்குகின்றனர். இதை மாற்ற ஆண்கள் பெண்களுக்கு ஆதரவாக போர்க் குரல் கொடுக்கவேண்டும். அவ்வாறு நடந்தால் பெண்களுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். சரிநிகர் சமமான நிலை என்பது இது தான” என ரச்சிதா கூறினார்.